ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சிதறுண்ட காலக்கடிகாரம்


புதிய வரவு

சிதறுண்ட காலக்கடிகாரம்
(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)

ருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த அமரர் திருமதி தங்கம்மா சரவணை நினைவாக ஈழத்துக் கவிகள் 30 பேரின் கவிதைகள் அடங்கிய புதிய நூல் வெளிவந்துள்ளது.

இத்தொகுப்பை சித்தாந்தன் , சி.ரமேஷ், மருதம் கேதீஸ் ஆகியோர் தொகுத்திருக்கிறார்கள்.

தொகுப்பில் ந.சத்தியபாலன், பெண்ணியா, எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா விஷ்ணு, சித்தாந்தன், பஹீமா ஜஹான், ஒட்டமாவடி அறபாத், வினோதினி,நவாஸ் சௌபி, மைதிலி,அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ.ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஷ், யாத்திரிகன், கோகுலராகவன், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, ஆழியாள், ரிஷான் ஷெரிப் ஆகிய 30 கவிகளின் கவிதைகள் உள்ளன.

இத்தொகுப்புப் பற்றி தொகுப்பாசிரியர்கள் பின்வருமாறு எழுதியிருப்பது கவனத்திற்குரியது

“இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே இக்கவிதைத் தொகுப்பு வெளிவருகின்றது. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து எழுதி வருபவர்களாவர். இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனதுகளுக்குள் படர்ந்திருக்கும் மென் உணர்வுகளின் தடங்களையும் கனவுகள் ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது. கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கான எத்தன முயற்சியாகவே இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது அனைத்து நிலைகளிலும் தொடரவேண்டும் என்பதே எமது விருப்பாகும். வலிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நிலையான சமாதான வாழ்வுக்கும் இத்தகைய மீள்வாசிப்பு உறுதுணையாக அமையும் என நம்புகின்றோம்.”

உண்மையில் போருக்குப் பின்னரான ஈழத்துக் கவிகளின் தொகுப்புக்களின் வரிசையில் வைத்துப் பார்க்கவேண்டிய ஒரு தொகுப்பாக இது அமைந்துள்ளது. தொகுப்பின்போதான கால அவகாசமும் பக்க வரையறையும் இன்னுஞ்சில நல்ல கவிதைகள் தவிர்க்கப்பட காரணமாகிவிட்டன என்றும்; மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அதனைச் சாத்தியமாக்கலாம் என்ற எதிர்காலச் செயற்பாட்டையும் தொகுப்பாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இவ்வாறான நல்ல முயற்சிகள் தொடர வேண்டும்.

நூல் விபரம்
நூல் – சிதறுண்ட காலக்கடிகாரம்
முதற்பதிப்பு – 23.08.2011
தொகுப்பாளர் – சித்தாந்தன்
சி.ரமேஷ்
மருதம் கேதீஸ்
பதிப்புரிமை – தி.ஜீவரட்ணம்
தொடர்புக்கு – sroobanjeeva@ymail.com

பதிவு - சு.குணேஸ்வரன்

5 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுக்கு நன்றிகள் துவாரகன்

    பதிலளிநீக்கு
  2. அறிமுகம் சிறப்பாக இருக்கிறது நன்றி.
    நூலைப் படிக்க வேண்டும்
    ---------------------------------
    நந்தினி மருதம், நியூயார்க, 20120-07-03

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நந்தினி

    பதிலளிநீக்கு
  4. அறிமுகம் சிறப்பாக இருக்கிறது நன்றி.
    நூலைப் படிக்க வேண்டும்
    ---------------------------------
    நந்தினி மருதம், நியூயார்க, 20120-07-03

    பதிலளிநீக்கு